Tuesday, November 3, 2009

நம்ம வீட்டு கல்யாணம்

பட்டு பேக் அகாடமி வழங்கும் நம்ம வீட்டு கல்யாணம்

இன்னிக்கு நம்ம வீடு கல்யாணம் நிகழ்ச்சில இரு மனங்கள் இணைந்து மகிழ்ந்த இவர்களுடைய திருமணம் பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள் ... வாங்க இவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்




திருவாளர்: எங்களோட கல்யாணம் ஒரு காதல் கல்யாணம் ... ஒரு திருட்டு மாங்கா பறிக்கும் போது தான் எங்களோட முதல் சந்திப்பு நிகழ்ந்தது ...




என்னவோ தெரியல இவள பார்த்த உடனே பிடிச்சிபோயிடுச்சி ... அதனால அந்த மாங்காவா நான் அவளுக்கு விட்டு கொடுத்துட்டேன் .. அப்புறம் அவள நான் தொடர்ச்சியா சந்திப்பதற்கு வாய்ப்புகிடைக்கல ... ஏன்னா அவ வேற கூட்டம் நான் வேற கூட்டம் ...

திருமதி: ஹா ஹா ... இவர் பொய் சொல்லுகிறார் ... இவர்க்கு ஒரு நாள் என்ன பார்கலைன்னா கூட தூக்கமே வராது ... எந்த மரத்துலயாச்சும் உக்கார்ந்து




என்ன பார்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் மரத்துக்கு மரம் கிளைக்கு கிளை தாவி என் கவனத்த ஈர்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் எனக்கும் ஒரு மாதிரியா இவர் மேல காதல் வந்திடுச்சி ...

திருவாளர் : இவளுக்கு என் மேல காதல் வரதுக்குள்ள நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல ... அந்த தெருகோடி இனிப்பு புளியமரத்துல குத்தகை காரனுக்கு தெரியாம இனிப்பு புளியாம்பழம் பறிச்சி கொடுத்து தான் இவளுக்கு நான் காதலனாவே ஆனேன் ...

திருமதி : ஹா ஹா ஹா ....


பார்த்தீங்களா .. இவங்களோட காதல் அனுபவம் எவ்ளோ மொக்கையா இருந்ததுன்னு ... வாங்க நேயர்களே .. இவங்க காதலித்த காலங்களில் எங்க எல்லாம் ஊரு சுத்தினாங்க எப்படி எல்லாம் நேரத்த செலவு பண்ணினாங்கன்னு அவங்களே சொல்லுராங்க ... கேட்கலாம் ..


திருவாளர் : அப்போ லாம் நாங்க ரெண்டு பேரும் சுத்தாத தோப்பு கிடையாது .. ஏறாத மரம் கிடையாது ... திருடி திங்காத காய் பழம் கிடையாது ... நாங்க சுத்த ஆரம்பிச்சதே ... இவளுக்கு சூரியன் பட்ட செம்மஞ்சள் நிற மாங்காய் பறிக்க தான் ... அந்த தெரு வாண்டுகள் கிட்ட போட்டி போட்டு நான் அந்த மாங்காய பறிச்சி இவளுக்கு கொடுப்பேன் ...




திருமதி : எங்களோட பொழுதுபோக்கே நான் இவருக்கும் இவர் எனக்கும்மா பேன் பார்த்துகிட்டே பேசிகிட்டு இருக்குறது தான் .. எங்களுக்கு ரொம்ப பிடிச்ச போழுபோக்கும் அது தான் ...




வெட்டிமொக்கைகளோட மொக்கை போலவே இவங்களோட பொழுதுபோக்கும் ரொம்பவே வித்த்யாசமானதாய் இருந்தது அல்லவா நேயர்களே ... இவங்களோட காதல் இவங்களோட பெற்றோர்களுக்கு எப்படி தெரிந்ததுன்னு சொல்ல போறாங்க .. கேட்கலாம் வாங்க ..

திருவாளர்: ரொம்ப நாள் வரைக்கும் எங்களோட காதல் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியாது ... நாங்க பழகினத கூட அவங்க ஆரம்ப கால கட்டத்துல இயல்பானதா தான் எடுத்துகிட்டாங்க ... போக போக தான் எங்க மேல சந்தேகம் வந்தது ... அப்புறம் ஒரு வழியா எங்க மேட்டர் எங்க கூட்டத்துக்கு தெரிஞ்சி ஆதரவும் எதிர்ப்பும் சமமா இருந்தது ...

திருமதி: நான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன் ... எப்படி எல்லாரையும் சமாளிச்சி இவர திருமணம் பண்ணிக்கபோரோமொன்னு ...

காதல் என்றாலே ... எதிர்ப்புகள சமாளிச்சி தான் ஆகனும் ... இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு இவங்களே சொல்லுறாங்க ... வாங்க இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு கேக்கலாம் ...

திருவாளர்: எங்க வீட்டு சைடு அவ்வளவா எதிர்ப்பு இல்ல ... அவங்க வீட்டுல தான் எல்லாரையும் சமாளிக்க வேண்டி இருந்தது ... எல்லாருக்கும் மாங்கா தேங்கா பறிச்சி கொடுத்து ஒவொருத்தரா சரி கட்டி எல்லார் கிட்டவும் எங்க கல்யாணத்துக்கு அனுமதி வாங்கினோம் ... இவளோட அப்பா மட்டும் ஐந்து இளநீர் , ஏழு மாங்காயா தின்னுட்டு தான் ஒத்துகிட்டார் ...




திருமதி: எங்களோட திருமணம் ஒருவழியா நிச்சயமாகிடுச்சி ... எங்க ரெண்டு பேர் கூட்டத்துலயும் சேர்த்து மொத்தம் ஒரு ஐம்பத்துஅஞ்சு பேர் தான் ... எல்லாரையும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போயி தான் எங்களோட திருமணத்துக்கு நேரடியா அழைச்சோம் ...

துன்பத்திலும் இன்பம் என்பது இதுதானோ ... வாங்க இவங்க திருமணம் எப்படி நடந்ததுன்னு கேட்கலாம் ...

திருமதி : எங்களோட திருமணம அந்ததோப்பிலெயெ இருக்குற பெரிய மரத்த்துல தான் நடந்தது ... எல்லா சொந்தபந்தம் ன்னு எல்லாருமே வந்திருந்தாங்க ...




திருவாளர் : எங்களோட ஹனிமூன் க்கு நாங்க பக்கத்து தோப்புக்கு போனோம் ... அங்க கடலைக்காடு ... தென்னந்தோப்பு ... ன்னு நல்லா சுத்தினோம் ... அங்க ஒரு பெரிய குளம் இருந்தது .. அங்க டைவ் குளிச்சத எங்களால எப்பவுமே மறக்க முடியாது ...




இவங்க காதலிக்கும் போதும் சரி .. ஹநிமூன்லையும் சரி ரொம்ப நல்லாவே என்ஜாய் பண்ணி இருகாங்க ... இவங்கள பத்தி இவங்க பெற்றோர் என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம் வாங்க ...

திருவாளரின் பெற்றோர்: ஆரம்பத்துல இவங்க காதல்ல எங்களுக்கு உடன்பாடு இல்ல ... இவன் ரொம்பவே பிடிவாதமா இருந்ததால தான் நாங்க இந்த திருமணத்துக்கே சம்மதிச்சோம் ...




நாங்கள தேடி இருந்தா கூட இப்டி ஒரு மருமக எங்களுக்கு கிடைச்சிருக்க மாட்டா ...

திருமதியின் பெற்றோர்: எங்க மாப்பிள்ளையோட அன்பு தான் நாங்க இந்த திருமணத்துக்கு சம்மதிக்க காரணம் ... ( மாபிள்ள ... அந்த இளநீர மறந்திடாதிங்க ... )

திருவாளர் ரொம்ப சாமர்த்தியமா எல்லாரையும் சமாளிச்சி தான் இந்த திருமணத்திற்கே எல்லாரையும் சம்மதிக்க வைத்திருக்கார் ... வாங்க இவரோட திருமண வாழ்க்கை பற்றி இவர் சொல்லுறத கேட்கலாம் ...

திருவாளர் : எங்களோட திருமண வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு ... இவர் தான் எங்க வீட்டு செல்லம் ... எங்க வாழ்க்கையின் அர்த்தமும் இவர் தான் எங்க செல்ல ஜுனியர் ...




திருமதி : இப்போவே இவன் எவ்ளோ சுட்டி தெரியுமா ... கொஞ்ச நேரம் சும்மாவே இருக்க மாட்டான் ... அவ்ளோ துறுதுறு ... மரத்துக்கு மரம் தாவிகிட்டு ... எல்லார்கிட்டவும் வம்பிழுத்துகிட்டு ...


இவங்க அன்பின் அடையாளமாய் ஜுனியர் ... இவங்க இன்று போல் என்றும் இனிமையாய் அன்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் நேயர்களே ... மீண்டும் வேறொரு திருமண தம்பதிகளுடன் மீண்டும் சந்திப்போம் நேயர்களே
... பட்டு பேக் அகாடமி வழங்கும் நம்ம வீட்டு கல்யாணம் ...



15 comments:

  1. vazhakkam pola en post ku naan than first comments podanuma? EKSI

    ReplyDelete
  2. ஜீனியர் பிறந்தப் பிறகு பேட்டியளிச்சிருக்கிங்காளே? நம்ம வீட்டு அறுபதாம் கல்யாணமா?

    ReplyDelete
  3. கலக்குறீங்க ஜானு...எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோனுது?

    ReplyDelete
  4. இப்படியும் ஒரு திருமண நிகழ்ச்சியா?

    ReplyDelete
  5. உண்மைய சொலுக போட்டோ கு போஸ் குடுத்து நீங்க தன்னா

    ReplyDelete
  6. என்னோடது: "வெட்டி பேச்சு"
    உங்களோடது: "வெட்டி மொக்கை"
    வாங்க, வாங்க, ...... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. Unga Blog Romba nalla iruku
    (`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

    High Definition Youtube Video Download free Click here

    Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

    தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

    Type anywhere in your language Type a word in English and press SPACE to transliterate

    ReplyDelete
  8. இது வால்பையன் கதையாச்சே!

    ReplyDelete
  9. யம்மாடி சிரிச்சி மாளல இப்படி ஒரு நம்ம வீட்டு கல்யானத்தை பார்த்ததே இல்லை

    ReplyDelete
  10. போட்டோஸ் எங்கே இருந்து கிடைச்சது, சூப்பரா இருக்கு!

    ReplyDelete
  11. உண்மைய சொலுக போட்டோ கு போஸ் குடுத்து நீங்க தன்னா //

    en friends ... :-)

    thanks chitra...

    thanks henry J..

    இது வால்பையன் கதையாச்சே! //

    sariya sonninga ...


    thanks jaleela ...

    thanks priya... photos google la search panni eduthathu than ..

    ReplyDelete
  12. www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

    New Classified Website Launch in India - Tamil nadu

    No Need Registration . One time post your Articles Get Life time
    Traffic. i.e No expired your ads life long it will in our website.
    Don't Miss the opportunity.
    Visit Here -------> www.classiindia.com

    ReplyDelete