Monday, October 12, 2009

நான் உங்களை கொலை செய்யக்காரணம்???


இந்த கேள்விக்கு விடை தேடுவது பெரும் பெருத்தபாடாக உள்ளது..(பெருத்தபாடு என்றால் என்ன?..ஹையா அடுத்த தலைப்பு ரெடி)

சரி உங்களை எல்லாம் கொலை செய்யணும் என்று முடிவாகி விட்டது ..ஆனால் எப்படி?எங்கே?எப்பொழுது

கொலை செய்ய காரணம் வேண்டும்..ஆனால் என்னிடம் காரணம் இல்லை

சரி காரணம் இல்லாமல் கொலை செய்ய முடியுமா?சரி அப்படியே செய்தாலும் ..சக கைதி கேட்பானே அவனுக்கு காரணம் சொல்லி ஆக வேண்டுமே .

சொல்லாமல் போய் அவன் என்னை கொலை செய்து விட்டால்?

ஆக காரணத்தை தேடி அலைவது என்று முடிவாகி விட்டது ..

காரணத்தை எந்த திசையில் தேடுவது?ஆக திசை குறித்த ஆராய்ச்சியில் இறங்குவது என்று முடிவாகிற்று...

சரி ஆராய்ச்சி பயன் அளிக்குமா?ஆக ஆராய்ச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்வது என்று முடிவாகி விட்டது ..

சரி ஆராய்ச்சி குறித்த ஆராய்ச்சி பயன் அளிக்குமா ?ஆக ஆராய்ச்சி குறித்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து ஆராய்ச்சி செய்வது என்றாகி விட்டது ..

இறுதியில் பார்கையில் எல்லாம் ...என்ன ஒரு மொக்கை தனம்?

ஐ ..மொக்கை ...சரி இதை ஒரு மொக்கை பதிவாய் இட்டு விட வேண்டியது தான் என்று யோசித்து எல்லாவற்றையும் கோர்வை ஆக்கி வாசித்து பார்க்கையில் ..."எனக்கே சிறிது இரத்தம் வந்து விட்டது "

ஆக மொத்தம் எப்படியோ உங்களை கொலை செய்ய வழி கிடைத்தாகி கிடைத்தாகி விட்டது ..

எப்படியாவது இந்த பதிவு hit ஆகிடனும் ..இல்லை நான் கொலைகாரனா மாறிடுவேன்..

3 comments: